Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மாமல்லபுரம்: சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்து பேசுகின்றனர்.
இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கி சென்றார். மாமல்லபுரத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மேல் துண்டுடன் இன்று காட்சியளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்து சேர்வதற்கு சிறிது நேரம் முன்னதாக மாமல்லபுரம் சிற்பங்களை மோடி சற்று நேரம் சுற்றிப்பார்த்தார்.